இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், முதல் இன்னிங்ஸில் காய்ச்சலோடு பேட் செய்தது
தெரியவந்துள்ளது.முதல் இன்னிங்ஸில் சுமார் ஒன்றரை பேட் செய்த சச்சின் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு மைதானத்தில்
இருந்து உடனடியாக வெளியேறிய சச்சின், காய்ச்சலுக்கு மருந்தை
எடுத்துக்கொண்டு தூங்கியுள்ளார். 3-வது நாளான சனிக்கிழமை
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது சச்சின் பீல்டிங் செய்யவில்லை. அவருக்குப்
பதிலாக மாற்றுவீரர் பீல்டிங் செய்தார். இதுகுறித்து அணி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட
அறிக்கையில், சச்சினுக்கு வைரஸ்
தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி சச்சின் ஓய்வு எடுத்து வருகிறார்.
மீண்டும் மருத்துவர்கள் அவரை பரிசோதிப்பார்கள். அதன்பிறகு அவர் பீல்டிங்கில் களமிறங்குவார்
என்று கூறப்பட்டிருந்தது. 4-வது நாள் ஆட்டத்தில்
மதிய உணவு இடைவேளை வரை சச்சின் பீல்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment