மூன்றாம் கண்.,: மோசடி புகார் எதிரொலி: நிலத்தை ஒப்படைத்தார் நடிகர் வடிவேலு

Pages

Tuesday, August 23, 2011

மோசடி புகார் எதிரொலி: நிலத்தை ஒப்படைத்தார் நடிகர் வடிவேலு


ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக வந்த புகாரை அடுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேல்
ஒப்படைத்தார்.சென்னை புறநகர் போலீஸ் கமிசனர் ராஜேஷ் தாசிடம் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 93-ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலியூரில் உள்ள 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார். இந்த கடன் தொகையை சரிவர செலுத்தாததால் பிணையாக வைக்கப்பட்ட சொத்தை தொழில் முதலீட்டு நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு பொது ஏலம் விட்டது. இந்த நிலத்தை, ஏலத்தில் எடுத்து தாம்பரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தேன். இந்த நிலையில், ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அந்த நிலத்திற்கு போலி ஆவணங்களை தயார் செய்யப்பட்டது. அதற்கு நடிகர் சிங்கமுத்து பவர் அட்டர்னி வாங்கி அதனை நடிகர் வடிவேலுக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு எனது நிலத்தில் சிலர் ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டுவதாக தகவல் அறிந்து சென்றேன். அப்போது நடிகர் வடிவேலு இந்த சொத்தை கிரயம் பெற்று தனது மனைவி விசாலாட்சிக்கு மாற்றி உள்ளதும் இதனை அவர் தனது மகன் பெயருக்கு மாற்றி இருப்பது தெரியவந்தது. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுத்து எனதுநிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் பழனியப்பன் கூறி இருந்தார். புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க புறநகர் கமிசனர் ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு உதவி கமிசனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஆல்வின், சப்-இன்ஸ்பெக்டர் மோகன ஈஸ்வரி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ராமச்சந்திரனின் மனைவி, மகன், நடிகர்கள் சிங்கமுத்து, வடிவேல், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை போலீஸ் துணை கமிசனர் பாஸ்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகியோர் மீது நிலமோசடி புகார் குறித்து கேட்டனர். இந்த வழக்கில், இரு தரப்பினருக்கும் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும், நடிகர் வடிவேலு, சிங்கமுத்துவிடம் வாங்கிய 2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை வங்கி அதிகாரி பழனியப்பனிடம் திருப்பி ஒப்படைத்து விட்டார். இதனால், அவர்கள் மீதான புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் துணை கமிசனர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...