மூன்றாம் கண்.,: எஸ்.பி.சரண் பாலியல் பலாத்காரம் நடிகை சோனாவுக்கு மாரடைப்பு

Pages

Sunday, September 18, 2011

எஸ்.பி.சரண் பாலியல் பலாத்காரம் நடிகை சோனாவுக்கு மாரடைப்பு


பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனும்,தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகருமான எஸ்.பி. சரண் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறியுள்ள
கவர்ச்சி நடிகை சோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.எஸ்.பி.சரண் தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார், மானபங்கம் செய்தார் என்பது உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களை சோனா கூறியுள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பதட்டமாக இருந்ததால் சோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் லேசான மாரடைப்பு ஏற்பட்டதை கண்டுபிடித்தனராம். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...