மதுரை, மாநகராட்சி கவுன்சிலர்
வேட்பாளர்கள் மற்றும் புறநகர் மாவட்ட பேரூராட்சி தலைவர் வேட்பாளரை மாற்றி, தி.மு.க., அறிவித்துள்ளது.
தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு:
மதுரை மாநகராட்சி 5வது வார்டுக்கு முரளி கணேசுக்கு பதில், டி.ஆர்.ரவீந்திரன், 34வது வார்டுக்கு நாகலட்சுமிக்கு பதிலாக புஷ்பம், 90வது வார்டுக்கு சித்ராவுக்கு பதிலாக ஏ.ஜி.சிவக்குமார், 91வது வார்டுக்கு எஸ்.கண்ணனுக்கு பதிலாக எம்.கண்ணன் ஆகியோர் வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளனர்.மதுரை புறநகர் மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவர் வேட்பாளராக கண்ணனுக்கு பதிலாக பீம்ராஜ் மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment