2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் மேற்கிந்திய தீவுகள் அணியை பேட்டிங் செய்ய
பணித்தது.தொடக்க வீரர்கள் சிம்மோன்ஸ் - எட்வர்ட்ஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் முதல் விக்கெட்டுக்கு 57 எடுத்தது. 25 ரன்னில் இருந்த போது எட்வர்ட்ஸ் மிஸ்ரா பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் வந்த சர்வாண் அருமையாக விளையாடி 56 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் சிம்மோன்ஸ் 53 ரன்னில் வெளியேறினார்.பின்னர் வந்த சாமுவேல்ஸ் (36), சமி (22) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் மிஸ்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னாப் பட்டேல் 3, யூசுப் பத்தான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 241 ரன் எடுத்தால் வெற்றி என்ற இறக்குடன் களம் இறங்கிய இந்தியா அணியின் தொடக்க வீரர் தவாண் 3 ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.பின்னர் வந்த வீராட் கோலி - பட்டேல் இணை 120 ரன்கள் குவித்தனர். 56 ரன்னில் பட்டேலும், 81 ரன்னில் கோலியும் ஆட்டம் இழந்தனர்.இந்தியா 100 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 37 ஓவராக குறைக்கப்பட்டது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றியுடன் விளையாடி இந்தியா 33.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்ட நாயகனாக கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment