ஆப்கானிஸ்தானில், தலிபான் மற்றும் அல்-குவைதா பயங்கரவாதிகளுக்கு எதிராக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படையினர் போரிட்டு வருகின்றனர்.
"தலிபான் பயங்கரவாதிகள் அல்-குவைதா பயங்கரவாத அமைப்பில் இருந்து பிரிந்து, அமைதி வழிக்கு திரும்ப வேண்டும்' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை தலிபான்கள் நிராகரித்தனர்.இந்நிலையில், அமெரிக்காவே முன்வந்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை துவக்கியிருப்பதாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் நேற்று காபூலில் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ""தலிபான்கள் உடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை துவங்கி, சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது,'' என்றார்.
No comments:
Post a Comment