மூன்றாம் கண்.,: தயாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

Pages

Wednesday, June 1, 2011

தயாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்


2ஜி ஊழல் வழக்கில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றை நடத்திவந்த சி. சிவசங்கரன், தனது பங்குகளை விற்க
வேண்டிய சூழ்நிலைக்கு, முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தான் காரணம் என்று சிபிஐ.,யிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது செல்போன் நிறுவனத்துக்கு உரிமம் வழங்க மாறன் தாமதம் செய்ததாகவும், பின்னர் அந்த நிறுவனத்தை வேறொரு நிறுவனம் விலைக்கு வாங்கியதும் உடனடியாக 14 உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் சிவசங்கரன் குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவசங்கரனிடம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்படுகிறது. அதன் அடிப்படையில் மாறன் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடும் என்று பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...