பாகிஸ்தானில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கப் படைகள் இன்று நடத்திய தாக்குதலில், ஹர்கத்-உல் ஜிஹாத்-இ-இஸ்லாமி (ஹுஜி) இயக்கத்தின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தகவலை பாகிஸ்தான்
ஊடகங்களும், பிபிசி உருது மொழி சேவையும் வெளியிட்டுள்ளது. தெற்கு வசிரிஸ்தான் பகுதியில், வானா பஜார் என்னும் இடத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமெரிக்கப் படைகள் அங்கு தாக்குதல் நடத்தின. இதில், இலியாஸ் காஷ்மீரி உட்பட 9 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில், சிகாகோ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இலியாஸ் காஷ்மீரி பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பின் லேடனுக்குப் பிறகு அல்-காய்தா இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு இலியாஸ் காஷ்மீரி வரக்கூடும் என்று கூறப்பட்டது. சமீபத்தில், கராச்சி கடற்படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலியாஸ் காஷ்மீரிக்கு முக்கியத் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment