தேசிய உணர்வு கொண்ட இளைஞர் படையை உருவாக்கவே விரும்புகிறேன் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
முன்னதாக தங்களைத் தாக்குபவர்களைத் திரும்பத் தாக்க ஆயதம் ஏந்திய இளைஞர்கள் படையை உருவாக்கப் போகிறேன் என்று பாபா ராம்தேவ் கூறியதாக செய்திகள் வெளியானது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராம்தேவின் இந்தப் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.இந்நிலையில் ஹரித்வாரில் உள்ள தனது யோகா பீடத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: நான் பயங்கரவாதிகளையோ அல்லது நக்சல்களையோ உருவாக்க பயிற்சியளிப்பேன் என்று கூறவில்லை. தேசிய உணர்வும், நாட்டுப் பற்றும் கொண்ட இளைஞர்கள் படையை உருவாக்க முயற்சி மேற்கொள்வேன் என்றுதான் கூறினேன் என்றார் ராம்தேவ்.
No comments:
Post a Comment