மூன்றாம் கண்.,: சூதாட்ட தரகருடன் தொடர்பா? ரெய்னா மறுப்பு

Pages

Saturday, June 4, 2011

சூதாட்ட தரகருடன் தொடர்பா? ரெய்னா மறுப்பு



 சூதாட்ட தரகருடன் ரெய்னாவுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு
தலைமையேற்றுள்ள ரெய்னா இதுகுறித்து மேலும் கூறியது: ஏராளமான மக்கள் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை எல்லாம் யாரென்று எனக்குத் தெரியாது. நான் எனது மேலாளருடன் மட்டுமே சாய் பாபா கோவிலுக்குச் சென்றேன் என்றார். கடந்த ஏப்ரல் மாதம் உலகக் கோப்பை வெற்றிக்குப் பின், ரெய்னா ஷீரடி சாய் பாபா கோவிலுக்குச் சென்றார். அப்போது அவர் நிறைய பேருடன் அங்கு சென்றதாகவும், அவருக்கு சூதாட்டக் கும்பல்களுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...