உய்யகுண்டான் திருமலையைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா(24 இவருக்கும் சென்னையைச் சேர்ந்த எம்.சி.ஏ., பட்டதாரி மதன்பிரபு என்பவருக்கும் திருச்சி,
உறையூரில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. சண்முகப்பிரியா பி.எட்., படித்து வருகிறார். பி.எட்., தேர்வு இன்று நடைபெறுகிறது. இதனால் திருமணம் முடிந்ததும், மணக்கோலத்தில், காட்டூரில் இருந்த தனியார் கல்லூரி தேர்வு மையத்திற்கு சென்று சண்முகப்பிரியா தேர்வு எழுதினார். அவர் தேர்வு எழுதும் வரை மணமகன் மதன்பிரபு , தேர்வு மையத்தின் வெளியே காத்திருந்து, தேர்வு முடிந்ததும் சண்முகப்பிரியாவை அழைத்துச் சென்றார்.இது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. மணமகன் மதன்பிரபுக்கு மூன்றாம் கண் வலையத்தின் பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment