மூன்றாம் கண்.,: தாக்குதலில் உயிர் தப்பினார் தாவூத் சகோதரர்

Pages

Tuesday, May 17, 2011

தாக்குதலில் உயிர் தப்பினார் தாவூத் சகோதரர்





மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பாலை குறி வைத்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இக்பால் நூலிலையில் உயிர் தப்பினார். அவரது கார் டிரைவர் ஆரிப் சையது உயிரிழந்தார். மும்பையில் வசிக்கும் இக்பால், செவ்வாய்க்கிழமை தெற்கு மும்பை பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது,
அடையாளம் தெரியாத 4 பேர், அவரை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், இக்பால் காயமின்றி தப்பி விட்டார். அவரது டிரைவர் ஆரிப் பலத்த குண்டு காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய நான்கு பேரில் 2 பேரை போலீஸôர் கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை போலீஸ் நிலையங்களில் இக்பால் மீது நிலமோசடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரௌடி கும்பல்களுக்கு இடையேயான போட்டியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று மும்பை போலீஸôர் தெரிவித்தனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...